latest

LATEST:

Grab the widget  IWeb Gator

gravatar

ரத்தின சபாபதியை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், சென்னையில் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி





கடையநல்லூர் : வெடிகுண்டு நாடகம் நடத்திய கோயம்புத்தூர் உளவுத்துறை அதிகாரி ரத்னசபாபதியை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி தடையை மீறி ஆர்பாட்டம் நடத்த முயன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பாப்புலர் பிரண்ட் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு இ பி கோ பிரிவுகள் 141,188, போன்ற இதர பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
ஏற்கெனவே இரத்தினசபாபதி யை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி 2008 March 1 நடந்த ஆர்பாட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது
எனவே July 22,2010 நேற்றைய முன்தினம் அசம்பாவிதங்கள் நடைபெற்றுவிடாமல் தவிர்க்க அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டிருந்ததால் காலை 8 மணியிலிருந்தே கடையநல்லூரில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
வேலியே பயிரை மேய்ந்த கதை போல சட்டத்தை மதிக்க வேண்டிய காவல் துறை அதிகாரிகள் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக சதித் திட்டம் செய்ததால் தடையை மீறி ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்தது பாப்புலர் பிரண்ட்.
சரியாக ஐந்தரை மணிக்கு குறித்த நேரத்தில் பாப்புலர் பிரண்ட் தலைவர் உட்பட நிர்வாகிகள் அனைவரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் சென்ற பொது காவல் துறையினரால் தடுக்கப்பட்டு கைது செய்ய முற்பட்டனர் .
பாப்புலர் பிரண்ட் தலைவர் அவர்கள் ஜனநாயக முறையில் கருத்துக்களை தெரிவிக்க தங்களுக்கு உரிமையுண்டு என எவ்வளவோ பேசிப் பார்த்தும் அதிகாரிகள் கேட்காமல் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அருகிலுள்ள வெள்ளாள செட்டியார் மண்டபத்தில் நீண்ட நேரம் தங்க வைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.