latest

LATEST:

Grab the widget  IWeb Gator

Archives

gravatar

நியூயார்க் வர்த்தக வளாகம் விமானங்களால் தாக்கப்பட்டது என்பது பொய்யான தகவல் & ஆய்வு அறிவிப்பு


நியூயார்க் வர்த்தக வளாகம் விமானங்களால் தாக்கப்பட்டது என்பது பொய்யான தகவல் என புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.

அமெரிக்காவில் உலகவர்த்தக மையம் தகர்க்கப்பட்ட ஒன்பதாவது ஆண்டு கடந்து விட்ட நிலையில் வேளையில் ஆர்கிடெக்ட்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் ஃபார் 9/11 ட்ரூத். உலக வர்த்தக வளாக தகர்ப்பு குறித்து உண்மைகளை வெளிவர பாடுபடும் அமைப்பின் கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டது மோதிய விமானங்களால் அல்ல குண்டுவெடிப்பின் மூலம்தான் என தனது அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அன்று நடந்த தாக்கு தலில் 3 ஆயிரம் பேர் பலியாயினர். இச்சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வஅறிக்கைகள் தவறு என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் ரிச்சார்ட் காஜ் தெரிவித்திருக்கிறார்.

கட்டிடங்களின் மீது விமானங் கள் மோதவில்லை எனவும், அக் கட்டிடங்களில் நடந்த குண்டு வெடிப்பினால்தான் உலக வர்த்தக மையம் தகர்ந்தது என காஜ் கூறுகிறார்.

உலக வர்த்தக மையம் உரு வாக்கப்பிருந்த இடத்திலிருந்து உரு கிய நிலையிலான உலோகச் சித றல்கள் கிடைத்துள்ளன. விமான எரிபொருள் இரும்பையோ அல்லது ஸ்டீலையோ உருக்கும் சக்தி பெற்றவையல்ல.. ஆத லால் கட்டிடத்தின் உள் பகுதியிலிருந்து இருந்த (!) பொருள்தான் கட்டிடம் தகர்வதற்கு காரணமாகயிருக்கும்-அறிக்கை கூறுகிறது.

விமானம் மோதாமலேயே 6.5 வினாடிகளில் கட்டிடங்கள் தகர்ந்தது எப்படி? என்பதுக் குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என 600 கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்கள் அடங்கிய அவ் வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட இடத்திலிருந்து கிடைத்த உலோக சிதறல்களில் நானோ தெர்மிட்டிக் ஒருங் கிணைப்பின் சிதறல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுவே உலக வர்த்தக வளாக கட்டிடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதற்கு ஆதாரம் எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

-சர்ஜுன் source www.tmmk.in

gravatar

உலகமக்களின் கடும் எதிர்ப்பின் எதிரொலி - புனித திருக்குர்ஆன் பிரதியை எரிக்கப் போவதாக அறிவித்த வெறியன் டெர்ரி ஜோன்ஸ் கைவிட்டான்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா சர்ச்சின் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் தற்பொழுது அதனை கைவிட்டு விட்டதாக அறிவித்துள்ளான்.

கிரவுண்ட் ஸீரோவுக்கு அருகில் மஸ்ஜித் நிர்மாணிக்காமலிருந்தால் தாங்கள் ஒருபோதும் திருக்குர்ஆன் பிரதியை எரிக்கமாட்டோம்எனவும் அவன் தெரிவித்துள்ளான்.

டெர்ரி ஜோண்ஸ் கிரவுண்ட் ஸீரோவில் இஸ்லாமிய மையம் நிறுவ ஏற்பாடு செய்துவரும் இமாம் ஃபைஸல் அப்துற்றவூஃப் பள்ளிவாசல் கட்டும் முயற்சியை வேறு இடத்திற்கு மாற்ற ஒப்புக் கொண்டுள்ளதாக கூறியதை அடுத்து தான் இந்த செயலில் இருந்து பின்வாங்கியதாக அவன் சப்பைக்கட்டு கட்டியுள்ளான். ஆனால் அது தவறான தகவல் என இஸ்லாமிய மையம் அறிவித்துள்ளது.

சமாதானத்தை லட்சியமாகக் கொண்ட எவருடனும் பேச்சு வார்த்தை நடத்த தயார் என நியூயார்க் இமாம் அப்துற்றவூஃப் உறுதிபடக் கூறியுள்ளார்.


திருக்குர்ஆன் பிரதியை எரிக்கும் விபரீதத்தை விளைவிக்கக்கூடாது என அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐ.யும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸும் செம்மையாக கண்டித்ததைத் தொடர்ந்து தான் நையபுடைக்கப்படுவதில் இருந்து தப்புவதற்காகவே அந்த பைத்தியம் தனது விபரீதத்தை செய்ய வில்லை என கூறப்படுகிறது.

இந்த பைத்தியக்கார னின் முயற்சி உலகெங் கும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கும் அமெரிக்க இராணுவத் தினரின் உயிருக்கு கடுமை யான அச்சுறுத்தலாக அமையும் என ஆப்கானில் நிலை கொண்டிருக்கும் நேட்டோ படைகளுக்கு தலைமை தாங்கும் அமெ ரிக்க படை தளபதி பெட்ராஸ் தெரி வித்தார். ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருக்கும் ஒரு லட்சத்து இருபதினாயிரம் துருப்புக்களுக்கும் நேரிடையான ஆபத்தை விளை விக்கக் கூடியது என்று அவர் கூறியிருந்தார். அரசு இதில் நேரடியாக தலையிட்டது. ஆனால் தனது அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டதாக வெளியான செய்தியை ஒபாமா மறுத்துள்ளார்.

அமெரிக்காவில் எல்லா மதப்பிரி வினருக்கும் சம உரிமை உண்டு என வும் மஸ்ஜித் கட்டுவதை எதிர்க்க வில்லை எனக்கூறிய ஒபாமா, கிரவுண்ட் ஸீரோவுக்கருகில் யூத தேவாலயமும், ஹிந்துக்கோயிலும் கட்டலாமென்றால் மஸ்ஜிதும் கட்டலாம் எனத் தெரிவித்தார்.

“நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரி களல்ல மாறாக பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள்” என ஒபாமா செப்.11 நினைவுத்தின நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்னர் வெள்ளை மாளிகையில் வைத்து நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மஸ்ஜித் கட்டுவதை ஆதரித்து நியூயார்க் நகரில் ஆயிரக்கணக் கானோர் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது.

திருக்குர்ஆன் பிரதியை எரிக்கும் திட்டத்திற்கு எதிராக உலகம் முழு வதும் கடந்த வெள்ளிக்கிழமை கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

வெறியன் டெர்ரி ஜோன்ஸ்&ன் இந்த அறிவிப்பை மத்திய உள் துறை அமைச்சர் ப. சிதம்பரம் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதனால் தேவையற்ற பதற்றமும் பகைமை உணர்வும் அதிகரிக்கும் என்று அவர் எச்சரித்தார். அதே நேரத்தில் இந்தியாவில் இந்தப் பிரச்னையை பத்திரிகைகள் கட்டுப் பாட்டுடன் கையாள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மத உணர்வுகளைக் காயப்படுத்தும் இந்தச் செயலை அமெரிக்க அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த நாகரிகமற்ற செயலைத் தடுத்து நிறுத்த அமெரிக்க அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் அதேநேரத்தில், அதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் இந்திய பத்திரி கைகளும், தொலைக் காட்சிகளும் அவற்றை வெளியிடுவதில் கட்டுப் பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். மதங்களிடையே நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்று விரும்பும் யாரும் இந்தச் செயலை கண்டிப்பார்கள் என் றார் அவர்.

அமெரிக்கர்கள் எதிர்ப்பு:

குரான் எரிப்பு அறிவிப் புக்கு பெரும்பாலான அமெரிக்கர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

குரான் எரிப்பு முடிவைக் கைவிடுமாறு அலாஸ்கா மாநில முன்னாள் ஆளுநரும் குடியரசுக் கட்சித் தலைவருமான சாரா பாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போலாகிவிடும். தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும். இது அமெரிக்க மரபுக்கு முரணானது என்றார் அவர். சகிப்புத்தன்மை, கருணை, நீதி, சமத்துவம் போன்ற உயர்ந்த எண்ணங்களைப் போதிக் கிறது கிறிஸ்துவம். எனவே இந்த முடிவை கைவிட வேண்டும் என்று அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத போதகர் டெர்ரியின் செயல் களுக்கும் அமெரிக்கர்களுக்கும், அமெரிக்க அரசுக்கும், அமெரிக்க மதங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். இது போன்ற அமெரிக்காவின் பல்வேறு தலைவர்கள் வெறியன் டெர்ரின் அறிவிப்பைக் கண்டித்தனர்.