latest

LATEST:

Grab the widget  IWeb Gator

Archives

gravatar

வல்லரசு ஆகப்போகுதாம் வெட்கம் கெட்ட இந்தியா !!


என்கவுண்டர் கொலைகளை நிகழ்த்தும் அதிகாரிகளுக்கு மரணத் தண்டனையை விதிக்க வேண்டும் என அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியிருந்தது.

பாலியல் வன்புணர்வு கொலையை விட கொடிய குற்றம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. கொலை ஒரு மனிதனை ஒருமுறை மட்டுமே கொலைச் செய்யும், ஆனால் பாலியல் வன்புணர்வு பாதிக்கப்பட்டவரை பல முறை கொலைச் செய்கிறது.

சட்டத்தின் அடிப்படையிலோ, மனித நேயத்தின் அடிப்படையிலோ முற்றிலும் ஒப்புக்கொள்ள வியலாத இத்தகைய கொடூர குற்றங்கள் ஜம்மு-கஷ்மீரில் அரசு சட்ட அந்தஸ்துடன் நடத்திவருகிறது. பல ஆய்வுகளும், விசாரணைகளும் இதனை உறுதிச் செய்துள்ளன. தற்பொழுது ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தின் மனித உரிமை கமிஷனே கூட்டுப் படுகொலைகளுக்கு ஆதாரங்களுடன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

கஷ்மீர் மாநிலத்தில் 38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்கள் அடக்க செய்யப்பட்டுள்ளதை மனித உரிமை கமிஷன் கண்டறிந்துள்ளது. இந்திய ராணுவம் கடுமையான மனித உரிமை மீறல்களை புரிந்துவருவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணை அரசு அதிகார வர்க்கத்தின் பயங்கரவாத முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

அநியாயமான படுகொலை, வீணாக கைதுச் செய்வது, எவ்வித காரணமுமின்றி சிறையில் அடைத்தல், சித்திரவதைகள், கொடுமைகள் இவையெல்லாம் கஷ்மீரில் பல வருடங்களாக சர்வ சாதாரணமாக நடந்துவருகிறது. அடையாளம் தெரியாத உடல்களுடன் 2730 பேரை கூட்டமாக புதைத்துள்ளனர் என்பதை மாநில மனித உரிமை கமிஷனின் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பாரமுல்லா, பந்திபூர், குப்வரா ஆகிய மாவட்டங்களிலிருந்து மட்டும் கிடைத்த புள்ளிவிபரங்கள் தாம் இவை. மத்திய-மாநில அரசுகள் கஷ்மீருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகத்தின் சித்திரம்தான் இவை. தீவிரவாதி, பயங்கரவாதி, ஊடுருவல்காரன் எனக்கூறி எவரையும், எப்பொழுதும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழல்தான் கஷ்மீரில் நிலவுகிறது. இது ஒரு பயங்கரமான சூழலாகும்.

இறுதியாக கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி இந்திய ராணுவம் ஒருவரை சுட்டுக் கொன்றது. அவர் பாகிஸ்தானைச் சார்ந்த லஷ்கர் போராளி இயக்கத்தின் பிராந்திய கமாண்டர் அபூ உஸ்மான் என ராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால், உண்மையில் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர் ஒரு கஷ்மீரி ஹிந்து ஆவார்.

1989-ஆம் ஆண்டு முதல் 10 ஆயிரம் கஷ்மீர் மக்கள் காணாமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கானோரை கஸ்டடியில் எடுத்து சித்திரவதைக்கு ஆளாக்குகின்றனர். இவ்வாறு கொடுமை இழைக்கப்படுவோர் 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் ஆவர். மக்களை முழுவதும் பீதியில் ஆழ்த்த தடை உத்தரவு உள்ளிட்ட தந்திரங்களை ராணுவமும், போலீசும் கையாழுகின்றன.

பெண்களுக்கு கொடுமை இழைக்கப்படுவது பல இடங்களிலும் வழக்கமாகிவிட்டது. பாலியல் வன்புணர்வு என்பது மக்களை அடக்கி ஆளுவதற்கான ஆயுதமாக மாறிவிட்டது என ரூர்த்வா பல்கலைக்கழக பேராசிரியரான டாக்டர்.மைதி கூறுகிறார். செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கையொன்றும் இதனையே கூறுகிறது.

உலகிலேயே அதிகமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது கஷ்மீரி பெண்கள்தாம் என ’டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ என்ற ஆய்வில் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு இரு தினங்களும் மூன்று வீதம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு பலியாவதாக பிரிட்டனில் ஒரு இணையதளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கலிஃபோர்னியாவில் பேராசிரியராக பணியாற்றும் இந்தியரான அங்கனா சாட்டர்ஜி கஷ்மீரில் அரச பயங்கரவாதத்தைக் குறித்து விரிவாக ஆய்வுச் செய்துள்ளார். மக்களை அடக்கி ஒடுக்க ராணுவத்திற்கு வாய்ப்புகள் கிடைப்பதற்காக கஷ்மீரில் தீவிரவாத-ஊடுருவல்களை குறித்து ஊதிப் பெருக்கிய பொய்கள் பரப்புரைச் செய்யப்படுவதாக அறிக்கை கூறுகிறது.

சுதந்திர இந்தியா அதன் குடிமக்கள் மீது இவ்வளவுதூரம் கொடுமை இழைத்த பிறகும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதன் காரணம் ‘தீவிரவாதம்’ என்ற லேபலை எதிர்ப்பவர்கள் மீது சுமத்துவதாகும். இதனையும் முறியடித்து விசாரணையை மேற்கொண்ட அங்கனா சாட்டர்ஜி உள்ளிட்ட பலரையும் தொந்தரவு அளித்து ஆய்விலிருந்து பின்வாங்கச் செய்வதற்கான முயற்சிகளை அரசு செய்கிறது.

கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சார்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ஷாப்பிராக்கிற்கு கஷ்மீர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மகளிர் எம்.பிக்களின் குழுவினர்கள் கூட மன்ஸ்காம் போன்ற சில பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வளவு நெருக்கடியிலும் ஹியூமன்ரைட்ஸ் வாட்ச், சர்வதேச தீர்ப்பாயம், செஞ்சிலுவை சங்கம், ஆம்னஸ்டி இண்டர்நேசனல் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் பல வேளைகளிலும் கண்டறிந்த உண்மைகள் நம்மை வெட்கமடையச் செய்கின்றன. ஆட்சியாளர்களைப் போலவே தேசிய மனித உரிமை கமிஷன் மற்றும் மகளிர் கமிஷன் ஆகியனவும் கஷ்மீர் விவகாரத்தில் கையாலாத தன்மையை வெளிப்படுத்துகின்றன.

மோதல் படுகொலைகளை ஒரு கட்டத்தில் நியாயப்படுத்த முயன்றார் முன்னாள் தேசிய மனித உரிமை கமிஷனின் தலைவர். குடும்ப பாரம் ஒருபுறம், மன அழுத்தம் மறுபுறம் என காணாமல் போன கணவனை எண்ணி அவதியுறும் கஷ்மீரின் ‘அரை விதவைகளை’ (காணாமல் போன கணவர் உயிரோடு இருக்கின்றாரா? இறந்துவிட்டாரா? என்று தெரியாமல் துன்பத்தில் உழலும் கஷ்மீர் பெண்களுக்கு ‘அரை விதவை’ என பெயரிட்டுள்ளனர்) சந்தித்து ஆறுதல் கூறக்கூட தேசிய மகளிர் கமிஷனால் இயலவில்லை.

கஷ்மீர் இன்று தீவிரவாதத்தின் சின்னமாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் தேசத்திற்கு அவமானத்தை தேடி தரும் ராணுவத்தின் அக்கிரமங்கள் நிறைந்த மாநிலமாகவே காட்சி தருகிறது. ஒரு மாநிலத்தின் மக்களை அவதிக்கும் கொடுமைக்கும் ஆளாக்கிவிட்டு நாம் எவ்வாறு உலகத்தின் முன்னால் தலை உயர்த்தி நிற்க இயலும்? அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கஷ்மீரின் நிலைமை இன்னும் மோசமாகும். ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை வாபஸ்பெற வேண்டும் என்ற பல ஆண்டுகளாக முன்வைக்கப்படும் கோரிக்கை இன்னமும் வெறும் வார்த்தையளவிலேயே உள்ளது.

கஷ்மீர் மக்களின் துயரத்தை துடைக்க விரும்பினால் அரசு முதலில் செய்யவேண்டியது ராணுவத்தை அங்கிருந்து வாபஸ் பெறச் செய்வதாகும். கஷ்மீரில் சுமூகமான அரசியல் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவம் தடையாக உள்ளது.
ஜனநாயக நாடு என பெருமைக்கொள்ளும் நாம் ஒரு தேசத்தின் கொள்கை முடிவுகளை ராணுவத்திற்கு விட்டுக் கொடுப்பது வெட்ககேடானது. இது பெரும் துயரத்தை ஏற்படுத்தவே வழிவகைச் செய்யும்.

கட்டுப்பாடற்ற அதிகாரங்களை ராணுவத்திற்கு வழங்கியதன் விளைவுதான் மாநில மனித உரிமை கமிஷன் கண்டறிந்த உண்மைகள். இனிமேலும் கஷ்மீரின் கட்டுப்பாட்டை ராணுவத்திடம் ஒப்படைத்து கஷ்மீரை ஆபத்தான பள்ளத்தாக்காக மாற்றிவிடாதீர்கள். தேசத்திற்கு அவமானத்தை ஏற்படுத்திய கொடுங்கோலர்களை கண்டறிந்து தண்டனை அளிக்க அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் ஜனநாயகம், மனித நேயம் இவற்றிற்கெல்லாம் என்னதான் பொருள்

gravatar

அகம்



இன்று வியாழன்...

வெள்ளி சென்றது

நேற்றுப்போல். எத்தனை

வேகமாய் கடக்கிறது


இந்தியனின் இளமை


வளைகுடாவில்?!


எத்தனை
ஆண்டு அல்ல


குடும்ப வாழ்க்கை
ஓராண்டில்


எத்தனை
தடவை
என்றாகிப்போனதே!

ஊரிலிருந்து
வந்த நண்பன்


உன்

நினைவுகள் மொய்க்கும்
பெட்டியொன்று தந்தான்.



அட்டைப்பெட்டியின் மேல்
எழுதியிருந்த
என் பெயர்
சற்றே அழிந்தது ...
அட்டைப் பெட்டியை நீ


ஒட்டிக் கட்டுகையில்


பட்டுத் தெறித்த உன்


நெற்றிப் பொட்டின் வியர்வையா


சொட்டுக் கண்ணீர் பட்டா?


அக்காள் கையால் செய்த
நார்த்தங்காய் ஊறுகாய்.


உம்மா பெருவிரலால்

நசுக்கி உலர்த்திய அப்பளம்.


பீட்ரூட் அல்வா

விகடன்,

ஜூ வி
உன் கையால்
கலந்தரைத்த மசாலாப்பொடி.



நான் கேட்ட பொருட்களோடு
பெட்டி முழுதும்
ஒட்டி யிருந்தன.


நீயாக அனுப்பிய
கடுஞ்சோகப் பெருமூச்சும்
நிலைகுத்திய பார்வைகளும்...


- சபீர்


gravatar

ஒசாமா... உலகை உலுக்கிய ஆயுதம்..


ஒசாமா...

உலகை உலுக்கிய ஆயுதம்...

உளுத்து பிழைத்தவர்களின்

உறக்கம் கெடுத்த சிம்மசொப்பனம்...


நிலத்தில் புதைத்தால்-உன்

நினைவுகள் ஒசாமாக்களை உருவாக்கிவிடுமே

நீருக்கடியில் புதைத்தானாம் அமெரிக்கன்...


நீர்த்துபோகாத உன் வீரமும்...

தோர்த்துபோகாத உன் நெஞ்சுரமும்தான்...

அமெரிக்கனை மரணத்தில்கூட அச்சம்கொள்ளவைத்துள்ளது...


உலகத்தை அடக்கியாள நினைத்தவனை

அடக்கியாண்டவன் நீ...


நீ ஒரு ஊருக்காக போராடவில்லை...

நீ ஒரு நாட்டுக்காக போராடவில்லை...

உலகதிற்ககாகவே போராடியவன்...

ஆம்

அயோக்கிய அடிமைத்தனத்தில் இருந்து

உலகை விடுவிக்க போராடியவன்...


பொன்னும் பொருளும் கொட்டிகிடந்தும்

தீனுக்காக தட்டிகளித்தவன் நீ...

இறைவனுக்காக உன் வாழ்க்கையை

இறையாக்கியவன் நீ...


உன்னைகுறிவைத்து தாக்கிய பேடிகளின்

துப்பாக்கிகளும் வெட்கி தலைகுனியவே செய்திருக்கும்...

பேடிகளின் கைகளால் மாவீரனை துளைக்கிறோம் என்று...


ஜார்ஜ் புஸ்களும் டோனி பிலேர்களும்...

ஒபாமாக்களும் கேமரூங்களும் வாழும் சமகாலத்தில்

ஒசாமாக்களும் வாழவே வேண்டும்...


உனக்காக கோடிக்கணக்கான கரங்கள் உயர்ந்துள்ளது

உனது மறுமை வாழ்வை விசாலமாக்கிட...

உன் ஷஹீதை பரிபூரனமாக்கிட...

ஏக இறையவனிடம் துஆக்கள் செய்து...


ஒசாமா...

வெற்றி வாழ்கை நடத்தி

வீரஷஹீத் பாக்கியம் பெற்ற மகிழ்ச்சியுடன் போய் வா...


உன்னைப்போல நாங்களும் சத்தியவழியில்...

அச்சமே அச்சம்கொள்ளும் வீரநெறியில் வாழ்ந்திட...

எங்களுக்காக துஆ செய்...


இறைவன் நாடினால்...

மகத்தான மறுமையில் சந்திப்போம்...

-நன்றி நிதர்சனங்கள்

gravatar

உஸாமா:ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு சின்னம்!



அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சர்வ சக்திகளுக்கு சவால் விட்டுக்கொண்டு ஒரு பத்தாண்டு காலம் உஸாமா பின் லேடன் சர்வதேச களத்தில் மறக்க முடியாத மனிதராக திகழ்ந்தார். 2001 செப்டம்பர் 11-ஆம் தேதி உலக வர்த்தக மையம் தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் நம்பர் 1 எதிரியாக பிரகடனப்படுத்தப்பட்ட போராளியாக உஸாமா மாறினார்.அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் அனைத்து சக்திகளையும் பிரயோகித்தும் உஸாமாவையோ அவருடைய முக்கிய தோழர்களையோ கண்டுபிடிக்க இயலவில்லை. அமெரிக்காவிற்கும், அதன் கூட்டணி நாடுகளுக்கும் எதிராக சர்வதேச அளவில் நடந்துவரும் வாழ்வா? சாவா? போராட்டத்தில் உலக மக்களின் அனுதாபமும், ஆதரவும் போராளிகளுக்கு தான் என்பதை உச்ச பட்ச குரலில் பிரகடனப்படுத்திய அனுபவமாக மாறியது உஸாமாவின் பங்கு.இறுதியாக நேற்று முன்தினம் இரவில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பத்தாண்டு கால நாடகத்தின் முடிவுரையாக உஸாமா கொல்லப்பட்ட செய்தியை பிரகடனப்படுத்தினார். பயங்கரவாதத்திற்கெதிரான போரில் பெரும் வெற்றியாக உஸாமா கொல்லப்பட்டதை பாரக் ஒபாமாவும், அமெரிக்க ஊடகங்களும் வர்ணிக்கின்றனர்.அமெரிக்காவின் அபிமான சின்னமான உலக வர்த்தக மையத்தை தகர்த்து எறிந்து ஏகாதிபத்தியத்திற்கு மிக கடுமையான பதிலடியைக் கொடுத்த போராளியாக உஸாமாவை குறித்து பலரும் கருதுகிறார்கள். இத்தாக்குதல் அமெரிக்காவிற்கு எப்பொழுதும் மாறாத வடு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை .ஆனால், இவ்வேளையில் உலக சமூகத்தின் முன்னால் எழுகின்ற ஒரு கேள்வி என்னவெனில் ஏன் சமகாலத்தில் தங்கள் உயிரையும் அர்ப்பணித்துக் கொண்டு இறுதிவரை போராட ஆயிரக்கணக்கான மக்கள் தயாராகின்றார்கள்? என்பது தான்.ஏகாதிபத்தியத்தின் மனிதகுலத்திற்கு எதிரான கொள்கைகளுக்கு எதிராக இயற்கையாகவே எழும் பழிவாங்கும் உணர்வு தான் இங்கு போராட்டமாக வெடித்துள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது. போராளி இயக்கங்களை கொடூரமானவர்களாக சித்தரிப்பதற்கு போதுமான ஊடக பலம் ஏகாதிபத்திய சக்திகளிடம் உள்ளதை மறுக்கவில்லை.அவர்களை குருதி வெள்ளத்தில் மூழ்கடித்து கொலை செய்யும் ஆயுத பலமும் அவர்களிடமுள்ளது. உஸாமா பின் லேடனை வேட்டையாடுகிறோம் எனக்கூறிக் கொண்டு ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் லட்சக்கணக்கான நிரபராதிகளை ஏகாதிபத்திய சக்திகள் கொன்று குவித்தன. இத்தகைய இரத்தக்களரிகள் ஏகாதிபத்தியம் நிகழ்த்திவரும் கொடூரங்களுக்கு ஆதாரங்களாக திகழ்கின்றன.உஸாமா பின்லேடன் கொலை செய்யப்பட்டதன் மூலம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வந்துவிடாது .இது அமெரிக்காவிற்கும் தெரியும். காரணம், அநீதிகளின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஏகாதிபத்தியம் என்ற உலக ஒழுங்கிற்கு எதிரான போராட்டம் தான் இங்கு நடைபெற்றுவருகிறது. இரத்த சாட்சியாக மாறிய உஸாமா அந்த போராட்டத்தின் ஒரு சின்னம் மட்டுமே!
அ.செய்யது அலீ.
source: thoothuonline

gravatar

திலீப் படிதாரைக் குறித்து துப்புக் கொடுத்தால் 2 லட்சம் பரிசு!!!



இந்தூர்,ஜன.31:இரண்டாவது மலேகான் குண்டுவெடிப்ப்பின் சாட்சியான திலீப் படிதாரைக் குறித்து துப்புக் கொடுத்தால் 2.லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என சி.பி.ஐ அறிவித்துள்ளது.


திலீப் படிதாரை கடந்த 2 ஆண்டுகளாக காணவில்லை. படிதாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென நேற்று முன்தினம் மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது.

பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய குற்றவாளியாக போலீஸ் தேடிவரும் ஹிந்துத்துவா பயங்கரவாதி ராம்ச்ந்திர கல்சங்கரா என்ற ராம்ஜியின் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் திலீப் படிதார்.

2008 ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது மலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக வாக்குமூலம் பதிவுச்செய்ய படிதாரை ஏ.டி.எஸ் கஸ்டடியில் எடுத்ததை அவருடைய குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

gravatar

மலேகான் குண்டுவெடிப்பு!! ஹிந்துத்துவா பயங்கரவாதி கைது



மும்பை,பிப்.2: 2008-ம் ஆண்டில் நடைபெற்ற மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பிரவீண் முத்தலிக் கைதுச் செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்துவந்த பிரவீணை கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டம் லோககில் வைத்து மஹாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்பு படையினர் கைதுச் செய்தனர். மஹாராஷ்ட்ரா சட்டவிரோத செயல் தடுப்புச்சட்ட நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை பிப்ரவரி 14-ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இவருடன் சேர்த்து மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

மலேகானில் குண்டுவெடிப்பு நிகழும்பொழுது இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாதி கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித்தின் அந்தரங்கச் செயலாளராக பணியாற்றியவர்தான் பிரவீண். இவ்வழக்கில் சதித்திட்டத்தை வெளிக்கொணர்வதில் பிரவீணின் கைது உதவிகரமாக இருக்கும் என மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பை திட்டமிடுவதற்கு புனே, நாசிக், பஞ்ச்வாதி ஆகிய இடங்களில் நடந்த ரகசிய கூட்டங்களில் பிரவீண் முத்தலிக் பங்கேற்றுள்ளார். குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு தேவையான ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளை பாதுகாப்பாக வைத்திருந்த வாடகை அறையின் சாவி பிரவீண் முத்தலிக் வசமிருந்துள்ளது. அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆர்.டி.எக்ஸ்தான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது ஃபாரன்சிக் பரிசோதனையில் உறுதியானதாக ராகேஷ் மரியா தெரிவித்தார்.

மெக்கானிக் எஞ்சினீயரிங் பட்டதாரியான பிரவீண் முத்தலிக் அபினவ் பாரத் என்ற பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராவார். இவ்வழக்கின் குற்றவாளிகளான ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே ஆகியோர் தற்போதும் தலைமறைவாகவே இருந்து வருகின்றனர். பயங்கரவாத பெண் சாமியார் பிரக்யாசிங் தாக்கூர் மற்றும் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் ஆகியோரை முன்னரே ஏ.டி.எஸ் கைதுச் செய்திருந்தது. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி வடக்கு மஹாராஷ்ட்ராவின் நாசிக் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் ஆறுபேர் கொல்லப்பட்டிருந்தனர். ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் தொழுகைக்காக செல்லும் மஸ்ஜிதின் அருகில்தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

Posted by PUTHIYATHENRAL

gravatar

மனமாற்றத்திற்கு காரணம் சக முஸ்லிம் கைதி - சுவாமி அஸிமானந்தா!!!


புதுடெல்லி,ஜன.8:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்த சுவாமி அஸிமானந்தா, தான் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததற்கு காரணம் இதே வழக்கில் பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள ஒரு முஸ்லிம் இளைஞருடனான நல்லுறவுதான் காரணம் என தெரிவித்துள்ளார்.

மாஜிஸ்ட்ரேட் முன்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சுவாமி அஸிமானந்தா இதுக்குறித்து கூறியதாவது: "நான் ஹைதராபாத்தில் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்படும்பொழுது சக கைதிகளில் ஒருவர் அப்துல் கலீம் என்பவராவார்.

சிறைக்குள்ளே வைத்து கலீம் எனக்கு நிறைய உதவிச் செய்துள்ளார். எனது பொருட்களை எடுத்து வைக்கவும், உணவு மற்றும் தண்ணீர் கொண்டு தந்ததும் கலீம் ஆவார். கலீம் போன்ற நிரபராதிகள் சிறையில் வாடுவதைக்கண்டு இவ்வழக்கில் பிராயசித்தம் செய்வதற்காக எனது மனசாட்டி என்னைத் தூண்டியது.

அதனடிப்படையில்தான் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தேன் என அஸிமானந்தா கூறியுள்ளான்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

gravatar

குண்டுவெடிப்பை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் - சுவாமி அஸிமானாந்தா வாக்குமூலம்!!!


ஆர்.எஸ்.எஸ் தலைமையின் கட்டளையின்படிதான் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாகவும், அதற்கு தேவையான பணத்தை அளித்தது ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ்குமார் எனவும் அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.

கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி தீஸ்ஹஸாரி மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் தீபக் தாபாஸின் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளான் சுவாமி அஸிமானந்தா.

வாக்குமூலம் 42 பக்கங்களைக் கொண்டதாகும். இந்த குற்றத்தின் பெயரில் எனக்கு மரணத்தண்டனை கிடைக்கும் என தெரியும், ஆனாலும் எனக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளிக்கவேண்டும் என அஸிமானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எவருடைய மிரட்டலோ, தூண்டுதலோ இல்லாமல் சுயமாகவே இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளிப்பதாக அஸிமானந்தா தெரிவித்துள்ளான்.

அஸிமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்போது மாஜிஸ்ட்ரேட்டும், ஸ்டெனோ கிராஃபர் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் இருந்தனர்.

சுவாமி அஸிமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலம்: "இந்திரேஷ்குமாரும், நானும் எனது தாங் சபரிதாம் ஆசிரமத்தில் வைத்து கடந்த 2005 ஆம் ஆண்டு சந்தித்தோம்.

ஏராளமான ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் அவர் என்னைக் காண வந்திருந்தார். குண்டுவெடிப்புகளை ஒன்றும் நீங்கள் நடத்த தேவையில்லை எனவும், ஆர்.எஸ்.எஸ் உங்களுக்கு பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ள ஆதிவாசி மக்களிடையே நலப் பணிகளை மட்டும் செய்தால் போதும் என அவர் என்னிடம் தெரிவித்தார்.

குண்டுவெடிப்புகளை நடத்த சுனில் ஜோஷியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குண்டுவெடிப்புகளை நிகழ்த்த சுனில் ஜோஷிக்கு பணமும், ஆட்களையும் அளித்தது இந்திரேஷ்குமார் ஆவார்.

ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும், மலேகானிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த தூண்டியது நான் தான். 2002 ஆம் ஆண்டு ஹிந்துக்கோயில் ஒன்றின் மீது முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல் எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதனைக் குறித்து பரத் ரிதேஷ்வர், சுனில் ஜோஷி, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியவர்களுடன் விவாதித்தேன்.

குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு மற்றும் சிலரின் உதவியை கோருவதற்காக சுனில் ஜோஷியிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் அளித்தேன்.

பா.ஜ.க எம்.பி ஆதித்தியானந்தை அணுகினார் ஜோஷி. ஆனால், போதிய உதவி ஒன்றும் அவர் செய்யவில்லை என சுனில் ஜோஷி என்னிடம் தெரிவித்தார்.

2005 ஜூன் மாதம் முதல் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த பல்வேறு ரகசிய கூட்டங்களை நடத்தினோம். 80 சதவீதம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்பதால் மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்தலாம் என நான் ஆலோசனைக் கூறினேன்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் சேர விருப்பம் தெரிவித்ததால் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்த வேண்டுமென தெரிவித்தேன்.

அஜ்மீர் தர்காவில் ஏராளமான ஹிந்துக்களும் வந்து செல்கின்றனர். அதனை முடிவுக்கு கொண்டுவர அங்கேயும், அலிகார் பல்கலைக்கழகத்திலும் குண்டுவெடிப்பை நிகழ்த்தவேண்டுமென நான் அவர்களிடம் தெரிவித்தேன்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்பதால் அந்த ரெயிலில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆலோசனை தெரிவித்தது சுனில் ஜோஷியாவார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டு வைப்பதற்கான பொறுப்பை சுனில் ஜோஷியே ஏற்றுக்கொண்டார். 2006 ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு என்னைக் காண வந்தார். அப்பொழுது அவர் நாம்தான் மலேகானில் குண்டுவெடிப்பை
நிகழ்த்தினோம் என தெரிவித்தார்.

அன்றைய பத்திரிகையில் குண்டுவெடிப்புத் தொடர்பாக முஸ்லிம்களை கைதுச் செய்த செய்தி வெளியாகியிருந்தது.

மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பை நிகழ்த்த 40 ஆயிரம் ரூபாய் ஜோஷிக்கு அளித்தேன். காலம் தாழ்த்தாமல் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது." இவ்வாறு அஸிமானந்தா தெரிவித்துள்ளார். அவர் தற்பொழுது என்.ஐ.ஏவின் கஸ்டடியில் உள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்